29/01/2026
நீரிழிவு நோயும் - வாஸ்துவும் :
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கான சில வாஸ்து குறிப்புகள் மற்றும் தீர்வுகள் பற்றி காண்போம்.
இன்றைய உலகில் அதிகபட்சம் பேர், இந்த நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு, ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்த நீரழிவு நோயினால், உடல் மெலிந்து, சக்தி இழந்து, மாரடைப்பு, கால்களில் பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு என்று தொடர் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
நான் வாஸ்து பார்க்க சென்ற பல இடங்களில், பலர் இந்த நோயால் துன்பப்படுவதை பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். அவர்கள் வீட்டில் ஆராய்ந்து பார்த்த போது வீட்டில் இருந்த குறைபாடு காரணமாக சிலருக்கு நீரிழிவு நோய் உண்டாகி இருந்தது. சிலருக்கு பரம்பரை நீரிழிவுநோய் உண்டாகி இருந்தது.
நாம் வாங்கி வந்த விதிப்பயன் அடிப்படையில், ஜாதக ரீதியாக ஆறாம் பாவத்திற்கு சுக்கிரன் அல்லது குரு பகவான் தொடர்பு உண்டாகும் பொழுது நீரிழிவு நோய் உண்டாகிறது, இன்னும் பல ஜோதிட விதிகள் உள்ளது.
இன்றைய நவீன உலகில் தவறான உணவு பழக்கவழக்கங்கள் / வாழ்க்கை முறைகளால் இந்த நோயின் தாக்கம் அதிகமாக பரவி, நீரிழிவு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் கூட்டம் தள்ளி சாய்கிறது. சரி அவர்களும் மருத்துவம் பார்த்து மருந்துகளை கொடுக்கிறார்கள். ஆனால் யாருக்காவது நோய் தீர்ந்து உள்ளதா என்று பார்த்தால் இல்லை. 0.5 Mg வில் ஆரம்பிக்கும் மாத்திரையானது 1.0 mg/ 2.0mg/ Insulin injection இன்று மருந்தின் அளவு தான் கூடிக்கொண்டே போகிறது ஆனால் நோய் குணமாவது இல்லை. அவர்கள் ஆயுள் முடியும் வரை உடனிருந்தே கொல்கிறது.
நீரிழிவு நோயின் வகைகள்:
1. பரம்பரையாய் வரும் நீரிழிவு நோய் .
2. இடையில் வரும் நீரிழிவு நோய் .
3. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் நீரிழிவு நோய் .
இதில் முதலாவது வகைக்கு மருத்துவம் பார்த்து சரியானவர்கள் மிகக் குறைவு .
இப்பதிவில் அதைப்பற்றி நாம் பார்க்கப் போவதில்லை. அதேபோல் மூன்றாவது வரைக்கும் நாம் பார்க்கப்போவதில்லை.
இரண்டாவது வகையான , இடையில் வரும், உணவு / கலாச்சார சீரழிவு / வாழ்க்கை முறையினால் ஏன் நோய் உண்டாகிறது என்பதைப் பார்க்கலாம்.
நீரிழிவு நோய் உண்டாவதற்கான காரணங்கள் :
நமது உடலில் கணையம் என்ற உறுப்பில், இன்சுலின் என்ற மருந்து எப்போதும் சுரந்து கொண்டே உள்ளது. அது நாம் உண்ணும் உணவில் உள்ள பொருட்களை கார்போஹைட்ரேட் ஆக மாற்றி அதில் உள்ள சக்தியை மட்டுப்படுத்தி, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சர்க்கரை அளவு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக உள்ளது.
கணையத்தால் உங்கள் இரத்தத்தில் இன்சுலினை சரியாக சுரக்க முடியவில்லை என்றால், கார்போஹைட்ரேட்டுகள் செரிக்கப்படாமல் இருக்கும், இது உங்கள் உடலில் நேரடியாக ரத்தத்தில் கலந்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
கணையம் இரத்த ஓட்டத்தில் இன்சுலின் வெளியிடுவதை நிறுத்துவதால், உங்கள் உடலுக்கு சரியாக என்ன நடக்கிறது?
கணையத்திற்கு சற்று மேலே கல்லீரல் என்று அழைக்கப்படும் மற்றொரு உறுப்பு உள்ளது.
நாம் உண்ணும் எண்ணெய் பதார்த்தங்கள், ஜங்கிள்உணவு (Fast Food) சரியாக செரிக்காமல் , கல்லீரல் கொழுப்பாக மாறுகிறது. மேலும் கல்லீரலின் அளவை (பருமன் ) அதிகரிக்கிறது, இது கணையத்தில் அழுத்தத்தை உருவாக்குகிறது.
அந்த அழுத்தம் ஒரு தடையை உருவாக்குகிறது. மேலும் கணையம் இரத்த ஓட்டத்தில் இன்சுலின் வெளியிடுவதை நிறுத்துகிறது.
நம் உடலில் இன்சுலின் எவ்வாறு குறைகிறது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது, என்ற இந்த தகவலை மருத்துவர் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
மருத்துவரீதியாக கொழுப்பு கல்லீரல் நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணம். மேலும் இது தவிர, மற்ற காரணங்களும் உள்ளன.
உணவு அஜீரணம், கோபம், மன அழுத்தம் மற்றும் பதற்றம், ஆகியவையும் நீரிழிவு நோய் உண்டாவதற்கு காரணங்களாக அமைகிறது.மன அழுத்தம் மற்றும் பதற்றம் நீரிழிவு நோய்க்கு மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்து காரணங்களை, நான் இதை வாஸ்துவுடன் இணைத்து பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்ததில் சில தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன, கோபம், மன அழுத்தம், பதற்றம், ஆகியவை காரணமாக நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் கல்லீரல், கணையம் போன்றவற்றுக்கு பாதிப்பு உண்டாகிறது என்று கண்டறியப்பட்டது.
மன அழுத்தம் பதட்டம் உண்டாவதற்கு வாஸ்து ரீதியாக என்ன காரணம்:
வாஸ்து மூல நூல்களில் 16 திசைகளுக்கும் பதினாறு உடலுறுப்புகளை நம் முன்னோர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். எந்த திசை சார்ந்து வாஸ்து குறைபாடு உள்ளதோ அந்த உடலுறுப்பில் நோய்த்தாக்கம் உண்டாகிறது, என்று வாஸ்து அறிவியல் கூறுகிறது.
அதனடிப்படையில் கோபம் டென்ஷன் மன அழுத்தம் மனக்கவலை மனப்பதட்டம் ஆகியவைகளை குறிக்கும் திசைகளை நம் முன்னோர்கள் வகைபடுத்தி இருக்கிறார்கள்.
வாஸ்துவில் நீரிழிவு உண்டாக முக்கிய திசை உள்ளது.
1.கிழக்கு - தென் கிழக்கு திசை - ESE (தென் கிழக்கு அல்ல).வாஸ்து சாஸ்திரத்தின்படி கவலை, மன அழுத்தம், பதற்றம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு கிழக்கு - தென்கிழக்கு (ESE) திசை காரணம் ஆகும்.
2. தெற்கு - தென்மேற்கு SSW வாஸ்து சாஸ்திரத்தின்படி செரிமானக் கோளாறுகளை உண்டாக்குகிறது.
3 . வடமேற்கு திசையும் நீரிழிவு நோய் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது.
இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள முக்கிய ஏற்றத்தாழ்வு நெருப்பு சம்பந்தப்பட்ட உறுப்பு. கல்லீரல் ஆகட்டும் கணையம் ஆகட்டும் உடலின் மொத்த இயக்கமும் வெப்பம் சம்பந்தப்பட்ட இயங்குகிறது. ஒரு உடலில் வெப்பநிலை இல்லாமல் போய்விட்டால் அது சவமாகிவிடும். இதன் மூலம் நமது உடலுக்கு வெப்பம் என்பது எப்படி இயங்கு சக்தியாக இருக்கிறது என்பது நமக்கு தெரியவருகிறது.
நாம் நம் வீட்டில் அக்கினியை வளர்த்து சமைக்கும் இடமானது சரியான கோணத்தில் அமைய வேண்டும். தவறான இடத்தில் அமையும் பட்சத்தில் அந்த இல்லங்களில் வசிப்போருக்கு நோய்த்தாக்கம் உண்டாவது உறுதி என்று ஆய்வில் தெரிய வந்தது.
நாம் நெருப்பு உறுப்பு பற்றி பேசினால், எரிவாயு அடுப்பு முக்கியமாக நெருப்பு உறுப்பு மூலம் குறிப்பிடப்படுகிறது.அது தவிர, ஏர் பிரையர், எலக்ட்ரிக் ஸ்டவ், மைக்ரோவேவ், உள்ளமைந்த வாட்டர் ஹீட்டர் , மேல் தளத்தில் அமைந்திருக்கும் சோலார் வாட்டர் ஹீட்டர், சுவரில் உள்ள சிவப்பு நிறம், சிவப்பு நிற திரைச்சீலைகள் போன்றவையும் நெருப்பு உறுப்பைக் குறிக்கின்றன.
பலருடைய வீட்டில், திசைகள் சரியாக அமைந்துள்ளது என்று நினைத்து தென்கிழக்கு திசையில் அடுப்பை வைத்து சமையல் செய்கிறார்கள். யாருடைய வீட்டில் எல்லாம் வடக்கு திசை என்பது 337 டிகிரியில் அமைகி தோ, அவர்களுடைய வீட்டில் தென் கிழக்கு என்பது தன்னால் கிழக்கு தென் கிழக்காக மாறி இருக்கும். கிழக்கு தென்கிழக்கு என்பது ஒரு கடைதல் பகுதி ஆகும். அதாவது அவ்விடத்தில் உள்ள ஒரு பொருள் தூள் தூளாக நொறுங்கும் குணத்தை உடையது.
இந்த கிழக்கு தென்கிழக்கு ஆனது கோபம் மனப்பதட்டம் டென்ஷன் போன்றவைகளை உருவாகும் பகுதியாகும். அவர்கள் தென்கிழக்கு என்று நினைத்து அவ்விடத்தில் அடுப்பை வைத்து சமையல் செய்யும் பொழுது, அதில் சமைத்து உண்ணும் உணவை, உண்ணும் பொழுது அந்த உணவு விஷம் உடையது ஆகிவிடுகிறது. அது சரியாக ஜீரணமாகாமல் கொழுப்புகளாக கல்லீரல் மேல்படிகிறது, இதனால் கல்லீரலின் சுற்றளவு பெருத்து , கணையத்துக்கு மேல் அழுத்தத்தை உண்டாக்கி இன்சுலின் சுரப்பை தடைசெய்கிறது.
நெருப்பு சம்பந்தப்பட்ட அடுப்பு ESE திசையில் இருந்தால் அதை மிகைப்படுத்தி பதற்றம், மன அழுத்தம், பதட்டம், கொழுப்பு கல்லீரல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அது சர்க்கரை நோயை உண்டாக்கும்.
மேலும் ESE இல் நீங்கள் சிவப்பு நிறம் இருந்து, அதை கண்டுகொள்ளாத பொழுது அவ்வீட்டின் வசிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்கம் உண்டாகும்.
ESE திசையில் சிவப்பு நிற வர்ணம் பூசி இருந்தாலோ அல்லது சிவப்பு நிற திரைச்சீலைகள் இருந்தாலோ இந்த பாதிப்புகள் உண்டாகும்.
சர்க்கரை நோயை 100% குணப்படுத்த முடியுமா என்று சொன்னால்,அதற்கு என்னிடம் பதில் இல்லை, நோய் உண்டானது உண்டானது தான் அதன் வீரியத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். இதுபோல் வீட்டில் இது யாருக்கும் உண்டாகாமல் தவிர்க்கலாம். இந்த விஷயத்தில் நான் ஆய்வு செய்தது உணர்ந்தது என்னவென்றால்,
வகை 1 நீரிழிவு எனப்படும் மற்றொரு பரம்பரை நீரிழிவு நோய் உள்ளது.இதில் கணையம் இன்சுலின் தயாரிப்பதை நிறுத்துகிறது.
அது ஏன் நிகழ்கிறது என்றால், யாராவது சர்க்கரை நோய்க்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் போது,சிறிது நேரம் கழித்து, உங்கள் ஆழ் மனம் உடல் பெறுவதை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறது.மருந்து மற்றும் கணையத்தில் இருந்து போதுமான இன்சுலின் அதை உருவாக்காது தடைபடுகிறது.
வகை 1 நீரிழிவு நோயை மாற்றுவது சற்று கடினமாக இருக்கும்.ஆனால் நீங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்ட வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நீங்கள் குணப்படுத்தலாம்.எனவே நான் உங்களுக்கு சொன்ன முதல் திசை ESE ஆகும், இதில் நெருப்பு இருப்பது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.
இது தவிர, வேறு காரணங்களும் உள்ளன.
கழிவுஅகற்றும் திசையான தெற்கு - தென்மேற்கு (SSW), அல்லது மேற்கு திசையில், ESE திசையில் சில பொருள்கள் இருந்தால், அதனால் நீரிழிவு நோய் கூட ஏற்படலாம்.
ESE திசையானது கடைதலை (Charning) குறிக்கும் திசையாகும்.
இப்போது ESE திசையுடன் தொடர்புடைய பொருள்கள் என்னவென்றால், கடையும் தத்துவத்தில் இயங்கும் அனைத்து பொருட்களும், மேலும் சலிப்பு உண்டாகும் அனைத்து பொருட்களும்.அதாவது
சலவை இயந்திரம், மிக்சர், கிரைண்டர், அம்மிக்கல், ஆட்டுக்கல், மாவுதிருகி போன்ற பொருட்கள் ESE திசையை குறிக்கிறது.
உங்கள் வீட்டில் தெற்கு - தென்மேற்கு (SSW ) உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் திசையாகும். இந்த திசையில் சலவை இயந்திரம் இருந்தால், உங்கள் உடலில் இருந்து நல்ல சக்திகள் அகற்றப்படும்.உணவு செரிமானம் ஆகாமல், உணவிலிருந்து ஊட்டச்சத்து பிரித்து உடம்பில் சேராமல் வெளியேற்றும் அதனால் உடலுக்கு சக்தி குறைபாடு உண்டாகிறது.இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக நடந்து உடல் பலகீனம் ஆகிறது.
எனவே கழிவகற்றும் பகுதியான SSW வில் கடையும் தன்மையுடைய பொருட்கள் இருந்தால், நீரிழிவு உண்டாக்கும்.
3வது வாஸ்து குறிப்புகள்,
உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால்,அப்போது சர்க்கரை நோய் வரலாம்.உங்கள் உடலால் உணவை சரியாக ஜீரணிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு நீரிழிவு நோய் வரலாம்.
வடமேற்கு திசையானது நமது உடலின் வயிற்றை கட்டுப்படுத்துகிறது.உங்களுக்கு வடமேற்கில் ( NW) வாஸ்து தோஷம் இருந்தால், சர்க்கரை நோய் வரலாம்.
நீரிழிவு நோய்க்கான வாஸ்து தீர்வுகள் :
இதுவரை நீரிழிவு நோய் உருவாவதற்கு 3 திசைகள் காரணம் என்று பார்த்தோம். அப்பொழுது அதற்கான தீர்வுகளை காண்போம்.
உங்கள் வீட்டில் முதலில், ESE திசையில் இருந்து அனைத்து நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் அகற்றவும், SE பகுதிக்கு எரிவாயு அடுப்பை மாற்றவும், ESE பகுதியில் சுவரில் உள்ள சிவப்பு நிறம், சிவப்பு திரைச்சீலைகள் போன்றவற்றை மாற்றவும்.
அப்படி மாற்றுவதற்கு வழி இல்லை என்றால், சாத்தியமில்லை என்றால், நீங்கள் பச்சைக் நிற கல்லை (Baroda green granite Stone) ESE திசையில் எரிவாயு அடுப்புக்கு கீழே வைக்கலாம்.
SSW திசையில் இருந்து கடையும், பொடி செய்யும் தன்மையுடைய அனைத்து பொருட்களையும் அகற்றவும்.
NW திசையில் உங்களுக்கு ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை அகற்றவும் அல்லது சரி செய்து சமநிலை படுத்திக் கொள்ளவும். மேலும் வடமேற்கு திசையில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பொருட்களை அகற்றவும்.
இந்த தீர்வுகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிப்பது போன்று, சிகிச்சைகளைச் செய்யும்போது நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்த தீர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக குறைக்கும். அதன்பின்புமருத்துவரின் ஆலோசனையுடன் குணமடைந்த பிறகு மருந்து உட்கொள்வதை நிறுத்தலாம்.
இந்த ஆய்வு முடிவுகள், பல இடங்களில் பரிசோதித்துப் பார்த்து, ஓரிரு மாதங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்த நபர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்க தேவையில்லை என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
வாஸ்து சாஸ்திரம் என்பது ஜோதிடத்தில் ஒரு அங்கம். ஜோதிடத்தில் ஒரு பரிகார முறை தான் வாஸ்து சாஸ்திரம். அதை சரியான முறையில் கையாண்டால் நோயற்ற வாழ்வும் மனநிம்மதியும் பெற்று நலமுடன் வாழலாம். நம் தலைமுறைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கி விட்டுச் செல்லலாம்.
இந்த அற்புதமான கலையை எனக்குத் தந்து, மக்கள் சேவை செய்ய வைத்த,
ஸ்ரீ பஞ்ச பூதேஸ்வரருக்கும்
ஸ்ரீ த்ரிவிக்ரம பெருமாள் திருவடி களுக்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,
தயவுசெய்து இந்த பதிவை படித்துவிட்டு நடந்து செல்ல வேண்டாம். உங்கள் வீட்டிலோ | உங்கள் உறவுகளும், நண்பர்களும் | அக்கம்பக்கம் வீட்டினரும் இந்த நோயால் வருந்தி கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்கள் நோய் தீர நீங்கள் காரணமாக இருந்து சேவை செய்து புண்ணிய பலனை அடைய பிரார்த்திக்கிறேன்.
கமெண்டில் அந்த திசையை எப்படி கண்டுபிடிப்பது என்று கேள்விகளை தயவுசெய்து எழுப்ப வேண்டாம். பல வேலைகளுக்கு இடையில் இந்த பதிவை பதிவு செய்கிறேன் . உங்கள் அருகாமையில் உள்ள சிறந்த வாஸ்து நிபுணர்களை அணுகி அதற்குண்டான திசையை அறிந்து கொள்ளுங்கள்.
பிடித்திருந்தால் தயவு செய்து ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.
நீங்கள் தரும் ஆதரவுகளை பொறுத்துத்தான் மற்ற நோய்களுக்கு உண்டான வாஸ்து பதிவுகள் வெளிவரும்.