18/08/2020
Madurai as second capital 😍
மதுரை மக்களுக்கான நகரம் என்பதை அனைவரும் அறிந்ததே
மதுரையை துணை தலைநகரம் மட்டுமல்ல தலைநகராகவே நியமிக்க அணைத்து தகுதிகளும் மதுரைக்கு உண்டு
இன்று நேற்று அல்ல, மதுரை தோற்றுவிக்கபட்ட காலத்தில் இருந்தே தலைநகரம் தான் !
பாண்டியர்களின் தலை நகரம், தமிழின் தலைநகரம், பண்பாட்டின் தலைநகரம், கலாச்சாரத்தின் தலைநகரம்,அரசியலுக்கான தலைநகரம் என்று மதுரையின் புகழை கூறிக்கொண்டு செல்லலாம் !
தமிழர்கள் மட்டும் அல்ல, ஆங்கிலயேர்களும் மதுரையை ஒரு தலைநகரம் அந்தஸ்து வைத்து தான் பார்த்தனர்.
காலசூழலில் சென்னை தமிழகத்தின் தலைநகரமானது, அதை மாற்றுவது தவறு மற்றும் தேவையில்லாதது! ஆனால், துணை தலைநகரம் என்று ஒன்றை கூறவேண்டும் என்றால் அது மதுரை தான்.
வளர்ச்சி அடிப்படையில் இல்லையென்றாலும், மதுரை ஒரு மவுசு நகரம் ! அனைவரும் வரவேண்டும், தங்கவேண்டும் என்று என்னும் அளவுக்கு ஒரு மவுசு நகரம்.
இந்தியா முழுவதும் மதுரைக்கென ஒரு தனி இடம் உண்டு !! என்றைக்கும் மதுரை ஒரு அரசியல் நகரம், பல ஆளுமைகளை உருவாக்கிய நகரம்.
முன்னேறினாலும் தன் கலாச்சாரத்தை விடாமல் பின்பற்றும் நகரம் !
இரண்டாம் தலைநகரம் என்று ஒன்றை கண்டிப்பாக வைக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானால், மதுரையை அறிவித்து ஆகவேண்டும் !!
எங்களை பொறுத்தவரை எங்கள் மதுரை என்றைக்குமே தலைநகரம் தான், ஆனால் இந்தமுறை அதை அறிவிக்கும் வரை ஓயாது அனைவரும் ஒன்றுபடவேண்டும் !!
வாருங்கள், மதுரைக்கென குரல்கூடுப்போம் 🥰
Gunaamuthan photography 😍
கீழுள்ள hastagஐ அனைவரும் பயன்படுத்துங்கள்
#தூங்காநகரமே_துணைதலைநகரம்